Saturday, February 27, 2016

ஓயாது ஓரிறைப் பணி

ஓயாது ஓரிறைப்பணி
மனிதன் இறைவனுக்குச் செய்ய வேண்டிய தலையாய கடமை அவனுக்கு எந்தப் பொருளையும் இணையாக்காமல் வணங்குவதாகும். இந்த அடிப்படைக் கொள்கையை உலகக்குத் தெளிவுபடுத்த வந்தவர்கள்தான் இறைத்தூதர்கள்.
உயிரையும் துச்சமாக மதித்து இந்தக் கொள்கையை மக்களிடம் எடுத்துரைத்தார்கள். இதனால் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்கள். பலர் தங்கள் உயிரையும் இழந்தார்கள்.
இறைத்தூதர்கள், நல்லடியார்களின் சிறந்த பணியினால் இன்றும் ஓரிறைக் கொள்கை நிலைத்து நிற்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓரிறைக் கொள்கையை எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களின் எதிர்க்கும் விதமும் கடுமையாக இருக்கத்தான் செய்யும். என்றாலும் மன உறுதிமிக்க ஏகத்துவக் கொள்கையாளர்கள் அவர்களின் அனைத்து சதிகளையும் வென்று இவ்வுலகில் இக்கொள்கை நிலைபெறச் செய்வார்கள்.
என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) அவர்களிடம் வரும்.
இந்த இறைத்தூதரின் வாக்குப்படி ஏகத்துவச் சொந்தங்கள் எத்தனை எதிர்ப்பு வந்தாலும், இந்தக் கொள்கையில் நீடித்தும் இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்து கொண்டும் இருப்பார்கள்.
பணத்தாலும், பதவியாலும், உடலாலும் எண்ணற்ற துன்பங்களை இணைவைப்பாளர்கள் செய்து வந்தாலும், இந்தக் கொள்கையை அல்லாஹ் ஒளிரச் செய்வான்.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும், அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும், அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்
(அல்குர்ஆன் 66:8,9)

இணைவைப்புக்கு இணங்கா இஸ்லாமியப் பெண்கள்
இஸ்லாமிய வரலாறு கண்ட புரட்சிப் பெண்கள்
எம்.எஸ். ஜீனத் நிஸா,
ஆசிரியை, அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்.
ஏக இறைவனாகிய அல்லாஹ் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்கும் அனைத்து இடத்திலும் தன்னை வணங்க வேண்டும் என்று மட்டும் கூறாமல் அந்த இறைவணக்கத்தில் வேறு யாரையும் கூட்டாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடுகின்றான். ஆனால் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களை விட அவனுடன் மற்றவற்றையும் சேர்த்து வணங்குபவர்களே அதிகம் என்று தனது அருள்மறையாம் திருமறையில் குறிப்பிடுகின்றான்.
அவர்களில் பெரும்பாலானோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.
அல்குர்ஆன்:12:106
பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை இந்த இணைவைப்பில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெண்களே! இதற்கு எடுத்துக்காட்டாக லூத் மற்றும் நூஹ் நபியின் மனைவிமார்களைக் குறிப்பிடலாம்.
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. "இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!'' என்று கூறப்பட்டது.
அல்குர்ஆன் 66:10
இணைவைப்பை ஆதரித்தவர்களும் பெண்கள்தான். இந்த இணைவைப்பைக் கடுமையாக கண்டித்து அதற்கு எதிராகப் புரட்சி செய்தவர்களும் பெண்கள்தான். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றிருந்த பெண்கள் கூட எதை இழந்தாலும் இழப்போம் பகட்டு வாழ்க்கையை மட்டும் இழக்க மாட்டோம் என்று இறுமாப்புடன் இருந்த பெண்களெல்லாம் வரலாற்றை வென்றெடுத்த பெண்களாக மாறி சரித்திரத்தில் சாதனை படைத்துள்ளார்கள் என்பதற்கு ஃபிர்அவ்னின் மனைவி சிறந்த எடுத்துக்காட்டாவார்.
இணைவைப்புக்கு எதிராக பிர்அவ்னின் மனைவி
என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! பிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!'' என்று பிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
அல்குர்ஆன் 66:11
மன்னனின் மனைவியாக இணைவைப்பில் இருப்பதை விட படைத்தவனின் அடிமையாக இருப்பதே மேல் என்று எண்ணற்ற துன்பங்களை ஏற்றவர்கள் பிர்அவ்னின் மனைவி ஆஸியா அம்மையார் ஆவார்கள்.
இவ்வுலக இன்பத்தை விட மறு உலக இன்பமே மேல் என்பதை விளங்கி இணைவைப்புக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைக்குப் பயந்து இறை நம்பிக்கையாளருக்கு முன்மாதிரியாகத் திழந்தவர்கள் அன்னை ஆஸியா அம்மையார். உலக மக்கள் இவ்விசயத்தில் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நடக்க வேண்டும்.
இணைவைப்புக்கு எதிராக உடன்படிக்கை செய்த நபித்தோழியர்கள்
நபிகளார் காலத்தில் கற்சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த பெண்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை கொடுக்கும்போது அல்லாஹ்விற்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று உடன்படிக்கை செய்து இணை வைப்பிற்கு எதிராகக் களமிறங்கிய காட்சியை நாம் காணமுடிகின்றது. அதுவே அவர்களின் உடன்படிக்கைகளில் முதன்மையாகவும் இருந்தது.
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதிமொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 60:12
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்களிடம் "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்'' என்று உறுதிமொழி அளித்தால், அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள் எனும் (60:12ஆவது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க  மாட்டார்கள்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கை, அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை.
நூல் : புகாரி (7214)
இவ்வாறாக இணைவைப்புக் கொள்கையை எதிர்ப்பதில் காலம் காலமாக பெண்களின் பங்களிப்பு இருந்து கொண்டே இருந்தது. இத்தகைய பட்டியலில் உள்ளவர்கள்தாம் சத்திய சஹாபியப் பெண்மணிகளும். அவர்கள் தம் உயிரிலும் மேலான இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக சந்தித்த சோதனைகள் ஏராளம். ஆரம்ப காலத்தில் எதிரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளின் போதும், மக்கத்து குரைஷிகள் முஸ்லிம்களிடத்தில் நடந்து கொண்ட வெறித்தனமான செயல்களின் போதும், ஹிஜ்ரத், ஜிஹாத் போன்ற முக்கியமான காலகட்டங்களின்போதும் ஸஹாபியப் பெண்மணிகளிடம் காணப்பட்ட உறுதியும், பொறுமையும், சகிப்புத் தன்மையும் சொல்லி மாளாதவைகளாகும்.
தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஓர் மகத்தான இஸ்லாமியப் புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் சஹாபியப் பெண்மணிகள் ஆற்றிய சேவை மகத்தானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நபித்தோழியர்களின் வாழ்க்கைப் பாதையை இன்றைய இஸ்லாமியப் பெண்மணிகளும் பின்பற்றி சமூக சீர்த்திருத்தப் பணியில் எழுச்சியூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.
குறிப்பாக ஸஹாபியப் பெண்மணிகள் எவ்வாறு வாழ்ந்துள்ளார்கள்? அவர்கள் வரலாறு கூறும் படிப்பினைகள் என்னவென்பதை இன்றைய பெண்மணிகள் அறிந்திட வேண்டும். நபித்தோழியர்கள் எவ்வாறு தங்களின் வாழ்க்கையை இஸ்லாத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டார்களோ அவ்வாறே நாமும் திருக்குர்ஆன் மற்றும் நபிவழியின் அறிவுரைகளை ஏற்று அதன்படி செயல்பட முன் வரவேண்டும்.

இணைவைப்பு தொடர்பான நபிமொழிகள்
ரூபான் எம்.ஐ.எஸ்.ஸி
முதல் கடமை இணைவைக்காமல் இருப்பது
قال فإن حق الله على العباد أن يعبدوه ، ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்: புகாரீ 2856
மிகப்பெரிய பாவம்
حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قُلْتُ إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ قُلْتُ ثُمَّ أَيُّ قَالَ وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ قُلْتُ ثُمَّ أَيُّ قَالَ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ رواه البخاري 4477
அப்துல்லாஹ்பின்மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், "நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்'' என்று சொல்லி விட்டு, "பிறகு எது?'' என்று கேட்டேன். "உன் குழந்தை உன்னுடன் உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று சொன்னார்கள். நான், "பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், "உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (4477)
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 225)
2654- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ثَلاَثًا قَالُوا بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ الإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَجَلَسَ ، وَكَانَ مُتَّكِئًا فَقَالَ أَلاَ وَقَوْلُ الزُّورِ قَالَ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ.
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை) என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்)தான் என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
நூல் : புகாரி (யீ2654)
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (1 / 15)
32- حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ (ح) قَالَ : وَحَدَّثَنِي بِشْرٌ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدٌ ، عَنْ شُعْبَةَ ، عَنْ سُلَيْمَانَ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنْ عَلْقَمَةَ ، عَنْ عَبْدِ اللهِ ، قَالَ : لَمَّا نَزَلَتِ : {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} قَالَ أَصْحَابُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَيُّنَا لَمْ يَظْلِمْ فَأَنْزَلَ اللَّهُ : {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எவர் நம்பிக்கை (ஈமான்) கொண்டு பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்து விடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே அபயம் உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர் எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள் எங்களில் (தமக்குத் தாமே) அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்தாம் இருக்கிறார்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ், இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும் எனும் (31:13ஆவது) வசனத்தை அருளினான்.
நூல்: புகாரி (32)
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (4 / 12)
2766- حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الْمَدَنِيِّ ، عَنْ أَبِي الْغَيْثِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا : يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும்தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.
நூல்: புகாரி (2766)
5708حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنْ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களை விட்டும் இணை கற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் (5708)
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (4 / 162)
3334- حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ ، عَنْ أَنَسٍ يَرْفَعُهُ أَنَّ اللَّهَ يَقُولُ لأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ أدَمَ أَنْ لاَ تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلاَّ الشِّرْكَ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ஆம் என்று பதிலளிப்பான்: அப்போது அல்லாஹ், நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பிய போது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறுவான்.
அறிவிப்பவர்:  அனஸ் (ரலி) நூல் :புகாரி ( 3334)
இணைவைப்பு இல்லாதவர்களுக்கே மன்னிப்பு
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (8 / 67)
5215 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الأَعْمَشُ عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ عَنْ أَبِى ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاؤُهُ سَيِّئَةٌ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّى شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ مِنِّى ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَمَنْ أَتَانِى يَمْشِى أَتَيْتُهُ هَرْوَلَةً وَمَنْ لَقِيَنِى بِقُرَابِ الأَرْضِ خَطِيئَةً لاَ يُشْرِكُ بِى شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً யு. قَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا وَكِيعٌ بِهَذَا الْحَدِيثِ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்குவேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்து விடுவேன்.
யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச் செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணைவைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர்கொள்கிறேன்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்: முஸ்லிம் (5215)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (8 / 11)
5013 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الاِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلاَّ رَجُلاً كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا யு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.
அப்போது  "இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்'' என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் (5013)
இணைவைத்திருந்தால் இறைத்தூதர்களின் பெற்றோருக்கும் நரகமே
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (1 / 132)
347 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ أَبِى قَالَ « فِى النَّارِ யு. فَلَمَّا قَفَّى دَعَاهُ فَقَالَ « إِنَّ أَبِى وَأَبَاكَ فِى النَّارِ யு.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நரக) நெருப்பில்'' என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, "என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (347)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (3 / 65)
2304 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ « اسْتَأْذَنْتُ رَبِّى فِى أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِى وَاسْتَأْذَنْتُهُ فِى أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِى فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ யு.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், "நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.  எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (1777)
சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே
سنن الترمذى - مكنز - (5 / 1)
1079 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لأَحَدٍ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا யு. رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிடுபவனாக இருந்தால் மனைவி தன்னுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),
நூல் திர்மிதி (1079)
உதவி தேடுதல் அல்லாஹ்விடமே
سنن الترمذي - شاكر + ألباني (4/ 667)
إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله
நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ (2440)
அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றுதல்
1341حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ لَمَّا اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَتْ بَعْضُ نِسَائِهِ كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ وَكَانَتْ أُمُّ سَلَمَةَ وَأُمُّ حَبِيبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَتَا أَرْضَ الْحَبَشَةِ فَذَكَرَتَا مِنْ حُسْنِهَا وَتَصَاوِيرَ فِيهَا فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ أُولَئِكِ إِذَا مَاتَ مِنْهُمْ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا ثُمَّ صَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّورَةَ أُولَئِكِ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ رواه البخاري
ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்முஹபீபா (ரலி)  ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப் படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (1341)
1599حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْمُونٍ حَدَّثَنَا سَعْدُ بْنُ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي عُبَيْدَةَ قَالَ آخِرُ مَا تَكَلَّمَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْرِجُوا يَهُودَ أَهْلِ الْحِجَازِ وَأَهْلِ نَجْرَانَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ وَاعْلَمُوا أَنَّ شِرَارَ النَّاسِ الَّذِينَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ رواه احمد
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள். மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டவர்கள்தான்.
அறிவிப்பவர் : அபூஉபைதா (ரலி)
நூல் : அஹ்மத் (1599)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (2/ 67)
أَلاَ وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ أَلاَ فَلاَ تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ إِنِّى أَنْهَاكُمْ عَنْ ذَلِكَயு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கின்றேன்.
அறிவிப்பவர். ஜூன்துப் (ரலி)
நூல்: முஸ்லிம் (918)
سنن أبي داود ـ محقق وبتعليق الألباني (2/ 169)
1746 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ أَخْبَرَنِى ابْنُ أَبِى ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِىِّ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا وَلاَ تَجْعَلُوا قَبْرِى عِيدًا وَصَلُّوا عَلَىَّ فَإِنَّ صَلاَتَكُمْ تَبْلُغُنِى حَيْثُ كُنْتُمْ யு.
உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் பெருநாளாக ஆக்கிவிடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746,
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 111)
عن عائشة ، رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم قال : في مرضه الذي مات فيه لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مسجدا
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர். ஆயிஷா ரலி
நூல். புகாரி 1330
தர்ஹாக்களை இடித்தல்
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (3/ 61)
1764 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ حَبِيبِ بْنِ أَبِى ثَابِتٍ عَنْ أَبِى وَائِلٍ عَنْ أَبِى الْهَيَّاجِ الأَسَدِىِّ قَالَ قَالَ لِى عَلِىُّ بْنُ أَبِى طَالِبٍ أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِى عَلَيْهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ لاَ تَدَعَ تِمْثَالاً إِلاَّ طَمَسْتَهُ وَلاَ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْتَهُ.
அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள்.
அலி (ரலி) அவர்கள், என்னிடம் நபி ஸல் அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்தச் சிலையையும் அதனை அழிக்காமலும் உயர்த்தப்பட்ட எந்தக் கப்ரையும் தரைமட்டமாக்காமலும் விட்டு விடாதே! என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (1764)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (3/ 61)
1765 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ.
நபி (ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்:  ஜாபிர் ரலி
நூல்: முஸ்லிம்  (1765)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (3 / 61)
1763 - وَحَدَّثَنِى أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى عَمْرُو بْنُ الْحَارِثِ ح وَحَدَّثَنِى هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِىُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنِى عَمْرُو بْنُ الْحَارِثِ - فِى رِوَايَةِ أَبِى الطَّاهِرِ - أَنَّ أَبَا عَلِىٍّ الْهَمْدَانِىَّ حَدَّثَهُ - وَفِى رِوَايَةِ هَارُونَ - أَنَّ ثُمَامَةَ بْنَ شُفَىٍّ حَدَّثَهُ قَالَ كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِأَرْضِ الرُّومِ بِرُودِسَ فَتُوُفِّىَ صَاحِبٌ لَنَا فَأَمَرَ فَضَالَةُ بْنُ عُبَيْدٍ بِقَبْرِهِ فَسُوِّىَ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَأْمُرُ بِتَسْوِيَتِهَا.
ஸுமாமா பின் ஷுஃபை அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள "ரோடிஸ்' தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்றைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்'' என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம்  (1763)

நோய் நிவாரணம் அழிப்பவன் அவனே
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (7/ 157)
5675 حدثنا موسى بن إسماعيل ، حدثنا أبو عوانة عن منصور ، عن إبراهيم ، عن مسروق ، عن عائشة ، رضي الله عنها ، أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أتى مريضا ، أو أتي به- قال أذهب الباس رب الناس اشف وأنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (7 / 172)
5744- حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ ، حَدَّثَنَا النَّضْرُ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ : أَخْبَرَنِي أَبِي ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَرْقِي يَقُولُ امْسَحِ الْبَاسَ رَبَّ النَّاسِ بِيَدِكَ الشِّفَاءُ لاَ كَاشِفَ لَهُ إِلاَّ أَنْتَ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைத் துடைப்பாயாக! நிவாரணம் உன் கரத்தில்தான் உள்ளது. உன்னைத் தவிர துன்பத்தை நீக்குபவர் வேறு எவரும் இல்லை என்று கூறி ஓதிப்பார்த்து வந்தார்கள்.
நூல்: புகாரி (5744)
நேர்ச்சை அல்லாஹ்விற்கே
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (8/ 177)
عن عائشة ، رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم قال : من نذر أن يطيع الله فليطعه ، ومن نذر أن يعصيه فلا يعصه.
அல்லாஹ்விற்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்.: ஆயிஷா (ரலி)
நூல்:  புகாரி (6696, 6700)
அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்விற்கே!
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (6/ 84)
وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவரை அல்லாஹ் சபித்துவிட்டான்.
அறிவிப்பவர். அலீ பின் அபீ தாலிப் ரலி
நூல்: முஸ்லிம்  (4001)
மறைவான ஞானம் அல்லாஹ்விற்கே!
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (6/ 99)
أن رسول الله صلى الله عليه وسلم قال : مفاتيح الغيب خمس لا يعلمها إلا الله لا يعلم ما في غد إلا الله ، ولا يعلم ما تغيض الأرحام إلا الله ، ولا يعلم متى يأتي المطر أحد إلا الله ، ولا تدري نفس بأي أرض تموت ، ولا يعلم متى تقوم الساعة إلا الله.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்து. அல்லாஹ்வைத் தவிர அவற்றை வேறு யாரும் அறிய மாட்டார்கள். நாளை நடப்பதையும், கருவில் உள்ளவற்றையும், மழை எப்போது பொழியும் என்பதையும், ஒரு ஆத்மா எப்போது மரணிக்கும் என்பதையும் மறுமை நாள் எப்போது நிகழும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.
அறிவிப்பவர். இப்னு உமர் ரலி
நூல். புகாரி 4697
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (5 / 105)
4001- حَدَّثَنَا عَلِيٌّ ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَاةَ بُنِيَ عَلَيَّ فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ حَتَّى قَالَتْ جَارِيَةٌ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ.
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான்  அவர்களிடம்) எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள் (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார் என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல் என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (4001)
سنن ابن ماجة ـ محقق ومشكول - (3 / 91)
1897- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ أَبِي الْحُسَيْنِ اسْمُهُ : الْمَدَنِيُّ ، قَالَ : كُنَّا بِالْمَدِينَةِ يَوْمَ عَاشُورَاءَ ، وَالْجَوَارِي يَضْرِبْنَ بِالدَّفِّ وَيَتَغَنَّيْنَ ، فَدَخَلْنَا عَلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ ، فَذَكَرْنَا ذَلِكَ لَهَا ، فَقَالَتْ : دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ صَبِيحَةَ عُرْسِي ، وَعِنْدِي جَارِيَتَانِ يَتَغَنَّيَانِ ، وَتَنْدُبَانِ آبَائِي الَّذِينَ قُتِلُوا يَوْمَ بَدْرٍ ، وَتَقُولاَنِ فِيمَا تَقُولاَنِ : وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدِ ، فَقَالَ : أَمَّا هَذَا فَلاَ تَقُولُوهُ ، مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ.
நாங்கள் மதீனாவில் ஆசூரா நாளன்று இருந்தோம். அப்போது சில சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ருபைய் பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். இது பற்றி அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள், எனது திருமண நாளன்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள், பத்ருப் போரில் கொல்லப்பட்ட அவர்களின் முன்னோர்களைப் பற்றி புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். அதில் எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார் என்று அவ்விரு சிறுமிகளும் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள். நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஹுஸைன்,
நூல்: இப்னுமாஜா (1897)
பாவங்களை மன்னிப்பவன்
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (1 / 211)
834- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أَبِي الْخَيْرِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي قَالَ قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا ، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன், வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்
இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய் என்று கூறுங்கள்! என்றார்கள்.
நூல் புகாரி (834)
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (8 / 83)
6306- حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، حَدَّثَنَا الْحُسَيْنُ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ عَنْ بُشَيْرِ بْنِ كَعْبٍ الْعَدَوِيِّ ، قَالَ : حَدَّثَنِي شَدَّادُ بْنُ أَوْسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم سَيِّدُ الاِسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي اغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ قَالَ ، وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهْوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهْوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹும்ம ! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும்.
பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன்.
நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.
யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ, அவர் சொர்ககவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி),
நூல்: புகாரி (6306)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (2/ 185)
وَاعْتَرَفْتُ بِذَنْبِى فَاغْفِرْ لِى ذُنُوبِى جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு! உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை (என்று தொழுகையில் நிற்கும் போது நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்)
நூல்: முஸ்லிம் (1419)
தாயத்து
16781حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا قَالَ إِنَّ عَلَيْهِ تَمِيمَةً فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ وَقَالَ مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ رواه أحمد
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் வந்தனர். (அவர்களில்) ஒன்பது நபர்களிடம் நபியவர்கள் பைஅத் (உடன்படிக்கை) செய்தீர்கள். ஒருவரை விட்டு விட்டார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒன்பது பேரிடம் பைஅத் செய்தீர்கள் ஒருவரை விட்டு விட்டீர்களே? என்று கேட்டார்கள். (அதற்கு) அவர் மீது தாயத்து                                                                     இருந்தது என்று நபியவர்கள் கூறிவிட்டு தனது கையை நுழைத்து அதை அறுத்தார்கள். (பிறகு) அவரிடம் பைஅத் செய்தார்கள். மேலும், யார் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (16781)
இணைவைப்பு வாசகம் இருந்தால் அனுமதியில்லை
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ لَا بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ رواه مسلم 4079
அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்து வந்தோம். எனவே (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் ஓதிப் பார்ப்பதை என்னிடம் சொல்லிக் காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப்  பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (4427)
சகுணம் பார்த்தல்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ عَيْسَى بْنِ عَاصِمٍ عَنْ زِرِ بْنِ حُبَيْشٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ ثَلَاثًا وَمَا مِنَّا إِلَّا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ رواه أبو داود 3411
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சகுனம் பார்ப்பது இணை வைத்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)
நூல்: அபுதாவுத் (3411)
5757- حدثنا محمد بن الحكم ، حدثنا النضر ، أخبرنا إسرائيل ، أخبرنا أبو حصين ، عن أبي صالح ، عن أبي هريرة ، رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال : لا عدوى ، ولا طيرة ، ولا هامة ، ولا صفر.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது.
அறிவிப்பவர். அபூஹூரைரா (ரலி)
நூல்: புகாரி (5757)
سنن أبي داود ـ محقق وبتعليق الألباني - (3 / 236)
3316 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ بْنِ مِقْسَمٍ الثَّقَفِىُّ مِنْ أَهْلِ الطَّائِفِ قَالَ حَدَّثَتْنِى سَارَّةُ بِنْتُ مِقْسَمٍ الثَّقَفِىِّ أَنَّهَا سَمِعَتْ مَيْمُونَةَ بِنْتَ كَرْدَمٍ قَالَتْ : خَرَجْتُ مَعَ أَبِى فِى حَجَّةِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَسَمِعْتُ النَّاسَ يَقُولُونَ : رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَجَعَلْتُ أُبِدُّهُ بَصَرِى فَدَنَا إِلَيْهِ أَبِى وَهُوَ عَلَى نَاقَةٍ لَهُ مَعَهُ دِرَّةٌ كَدِرَّةِ الْكُتَّابِ فَسَمِعْتُ الأَعْرَابَ وَالنَّاسَ يَقُولُونَ : الطَّبْطَبِيَّةَ الطَّبْطَبِيَّةَ فَدَنَا إِلَيْهِ أَبِى فَأَخَذَ بِقَدَمِهِ قَالَتْ : فَأَقَرَّ لَهُ وَوَقَفَ فَاسْتَمَعَ مِنْهُ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِنِّى نَذَرْتُ إِنْ وُلِدَ لِى وَلَدٌ ذَكَرٌ أَنْ أَنْحَرَ عَلَى رَأْسِ بُوَانَةَ فِى عَقَبَةٍ مِنَ الثَّنَايَا عِدَّةً مِنَ الْغَنَمِ. قَالَ : لاَ أَعْلَمُ إِلاَّ أَنَّهَا قَالَتْ خَمْسِينَ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- : « هَلْ بِهَا مِنَ الأَوْثَانِ شَىْءٌ யு. قَالَ : لاَ. قَالَ : « فَأَوْفِ بِمَا نَذَرْتَ بِهِ لِلَّهِ யு. قَالَتْ : فَجَمَعَهَا فَجَعَلَ يَذْبَحُهَا فَانْفَلَتَتْ مِنْهَا شَاةٌ فَطَلَبَهَا وَهُوَ يَقُولُ : اللَّهُمَّ أَوْفِ عَنِّى نَذْرِى. فَظَفِرَهَا فَذَبَحَهَا.
'புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நான் நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
நூல்: அபூதாவூத் 2881,
மரத்தின் மீது நம்பிக்கை வைத்தல்
سنن الترمذي - شاكر + ألباني (4/ 475)
 2180 - حدثنا سعيد بن عبد الرحمن المخزومي حدثنا سفيان عن الزهري عن سنان بن أبي سنان عن أبي واقد الليثي : أن رسول الله صلى الله عليه و سلم لما خرج إلى خيبر مر بشجرة للمشركين يقال لها ذات أنواط يعلقون عليها أسلحتهم فقالوا يا رسول الله أجعل لنا ذات أنوط كما لهم ذات أنواط فقال النبي صلى الله عليه و سلم سبحان الله هذا كما قال قوم موسى اجعل لنا إلها كما لهم آلهة والذي نفسي بيده لتركبن سنة من كان قبلكم
நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் ஹுனைன் போருக்குச் சென்றோம். நாங்கள் குஃப்ரிலிருந்து விடுபட்டு (இஸ்லாத்தில் நுழைந்த புதியவர்களாக இருந்தோம்). முஷ்ரிகீன்கள் தங்கிச் செல்லும், தங்கள் ஆயுதங்களை தொங்கவிடும் இலந்தை மரம் இருந்தது, அதற்கு ‘தாது அன்வாத்’ எனச் சொல்லப்பட்டது.
அந்த இடத்தைக் கடக்க நேரிட்டபோது அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களுக்கு தாது அன்வாத் இருப்பது போன்று நமக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) மூஸாவிடத்தில் பனூ இஸ்ராயீல்கள் கேட்டது போன்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்: ‘அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போன்று நமக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக என்று அவர்கள் கேட்டனர். (அதற்கு மூஸா நபி) நிச்சயமாக நீங்கள் மடமையிலே இருக்கும் ஒரு சமுதாயம்’ (அல்அஃராப் 7: 138). என்று கூறினார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறிவிட்டு ‘நீங்கள் முன் சென்றவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவீர்கள்’
அறிவிப்பவர். அபுவாகித் அல்லைஸி (ரலி)
நூல். திர்மிதீ 2180
ஜோதிடனிடம் குறி கேட்பது
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (7/ 37)
4488 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا يَحْيَى - يَعْنِى ابْنَ سَعِيدٍ - عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَىْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيْلَةً
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பவர். ஸஃபிய்யா
நூல்: முஸ்லிம் (4488)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (2 / 70)
935 - عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِىِّ ஞ்قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَقَدْ جَاءَ اللَّهُ بِالإِسْلاَمِ وَإِنَّ مِنَّا رِجَالاً يَأْتُونَ الْكُهَّانَ. قَالَ « فَلاَ تَأْتِهِمْ யு. قَالَ وَمِنَّا رِجَالٌ يَتَطَيَّرُونَ.قَالَ « ذَاكَ شَىْءٌ يَجِدُونَهُ فِى صُدُورِهِمْ فَلاَ يَصُدَّنَّهُمْ யு.
... நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?'' என்றேன். அதற்கு அவர்கள் "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்'' என்றார்கள். நான் "எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?'' என்றேன். அதற்கு நபியவர்கள் "இது, மக்களின் எண்ணமாகும். இது உங்களை' (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி),
நூல்: முஸ்லிம் (935)
9171حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَوْفٍ قَالَ حَدَّثَنَا خِلَاسٌ عَنْ أَبِي هُرَيْرَةَ وَالْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه احمد
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
குறிகாரன் அல்லது வருங்காலத்தைக் கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என யாரேனும் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட வேதத்தை நிராகரித்து விட்டான்.
அறிவிப்பவர். அபூஹூரைரா(ரலி) நூல்: அஹ்மது (9171)
சூனியத்தை நம்புதல்
36212حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ رواه أحمد
(பெற்றோரை) நோய்வினை செய்பவன், சூனியத்தை (உண்மையென) நம்புபவன், மதுவில் (குடிப்பதில்) மூழ்கியவன், விதியை மறுப்பவன் ஆகியோர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
நூல்: அஹ்மத் (36212)
5764 حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سُلَيْمَانُ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ ، عَنْ أَبِي الْغَيْثِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : اجْتَنِبُوا الْمُوبِقَاتِ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணை வைப்பதும், சூனியமும் அவற்றில் அடங்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (5764)
வரம்புமீறி புகழக்கூடாது
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (4/ 204)
3445- حدثنا الحميدي ، حدثنا سفيان قال : سمعت الزهري يقول ، أخبرني عبيد الله بن عبد الله ، عن ابن عباس سمع عمر ، رضي الله عنه ، يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான்தான். அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்:  புகாரி 3445
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 231)
2662- حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ قَطَعْتَ عُنَقَ صَاحِبِكَ مِرَارًا ثُمَّ قَالَ - مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا أَخَاهُ لا مَحَالَةَ فَلْيَقُلْ أَحْسِبُ فُلاَنًا وَاللَّهُ حَسِيبُهُ ، وَلاَ أُزَكِّي عَلَى اللهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ مِنْهُ.
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர் என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, உங்களில் எவர் தன் சகோதரரைப் புகழ்ந்துதான்  ஆகவேண்டும் என்றிருக்கிறாரோ அவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக் கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன் என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும் என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (2662)
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (8 / 228)
5730 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى جَمِيعًا عَنِ ابْنِ مَهْدِىٍّ - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ حَبِيبٍ عَنْ مُجَاهِدٍ عَنْ أَبِى مَعْمَرٍ قَالَ قَامَ رَجُلٌ يُثْنِى عَلَى أَمِيرٍ مِنَ الأُمَرَاءِ فَجَعَلَ الْمِقْدَادُ يَحْثِى عَلَيْهِ التُّرَابَ وَقَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ نَحْثِىَ فِى وُجُوهِ الْمَدَّاحِينَ التُّرَابَ.
அபூ மஅமர் அப்துல்லாஹ் பின் சக்பரா அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் எழுந்து தலைவர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள், (புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த) மனிதரின் மீது மண்ணை அள்ளி வீசலானார்கள். மேலும், "அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசுபவரின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்'' என்று கூறினார்கள்
நூல் : முஸ்லிம் (5730)
நட்சத்திரத்தால் மழை பொழிந்தது என்று நம்புவது
846حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ رواه البخاري
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹுதைபியா' எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று கூறினர்.
அப்போது "என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்' என இறைவன் கூறினான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி (846)
3406حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُسَدَّدٌ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اقْتَبَسَ عِلْمًا مِنْ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنْ السِّحْرِ زَادَ مَا زَادَ رواه أبو داود
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் நட்சத்திர ஜோசியத்தைக் கற்றுக் கொள்கிறாரோ அவர் அதன் மூலம் சூனியத்தின் ஒரு பகுதியைத் தவிர வேறெதையும் கற்றுக் கொள்ள மாட்டார். அதிகப்படுத்துபவன் அதிகப்படுத்திக் கொள்கிறான்.
நூல்: அபுதாவுத் (846)
அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்ய வேண்டாம்.
3829 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ قَالَ سَمِعْتُ الْحَسَنَ بْنَ عُبَيْدِ اللَّهِ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ قَالَ سَمِعَ ابْنُ عُمَرَ رَجُلًا يَحْلِفُ لَا وَالْكَعْبَةِ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ رواه أبو داود
கஅபாவின் மீது சத்தியமாக என்று ஒரு மனிதர் சத்தியம் செய்வதை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள். அப்போது யார் அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம் செய்கிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான் என்று நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
நூல்: அபுதாவுத் (3829)
3836 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا مَنْ كَانَ حَالِفًا فَلَا يَحْلِفْ إِلَّا بِاللَّهِ فَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا فَقَالَ لَا تَحْلِفُوا بِآبَائِكُمْ رواه البخاري
இப்னு உமர் (ரலி) அவர்கள்  அவர்கள் கூறியதாவது:
"எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில் குறைஷிகள் தம் முன்னோர்கள் மீது சத்தியம் செய்து வந்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள் "உங்கள் முன்னோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள்'என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (3836)
6646 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَدْرَكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَهُوَ يَسِيرُ فِي رَكْبٍ يَحْلِفُ بِأَبِيهِ فَقَالَ أَلَا إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ مَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ رواه البخاري
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் தமது வாகனத்தில் பயணம் செய்தபடி தம்முடைய தந்தை பெயரால் சத்தியம் செய்து கொண்டிருந்த போது அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றடைந்தார்கள். "அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான். (ஆகவே) சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (6646)
4860- حدثنا عبد الله بن محمد ، أخبرنا هشام بن يوسف ، أخبرنا معمر ، عن الزهري عن حميد بن عبد الرحمن ، عن أبي هريرة ، رضي الله عنه ، قال رسول الله صلى الله عليه وسلم : من حلف فقال في حلفه واللات والعزى فليقل لا إله إلا الله ، ومن قال لصاحبه تعال أقامرك فليتصدق.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் சத்தியம் செய்யும் போது லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறி விட்டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்.
அறிவிப்பவர். அபூஹூரைரா (ரலி)
நூல். புகாரி 4860
பிறருக்காக எழுந்து நிற்பது
2679حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنْ أَبِي مِجْلَزٍ قَالَ خَرَجَ مُعَاوِيَةُ فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ وَابْنُ صَفْوَانَ حِينَ رَأَوْهُ فَقَالَ اجْلِسَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ وَفِي الْبَاب عَنْ أَبِي أُمَامَةَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنْ أَبِي مِجْلَزٍ عَنْ مُعَاوِيَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ رواه الترمذي
தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். முஆவியா (ரலி)
நூல்கள். திர்மிதீ 2679, அபூதாவூத் 4552
مسند أحمد بن حنبل (3/ 151)
12548 - حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الصمد ثنا حماد عن حميد عن أنس قال : كان رسول الله صلى الله عليه و سلم يقبل وما على الأرض شخص أحب إلينا منه فما نقوم له لما نعلم من كراهيته لذلك
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும்போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678
பிறருக்கு காட்டுவதற்காக தொழுவது
مسند أحمد بن حنبل (4/ 125)
رسول الله صلى الله عليه و سلم يقول من صلى يرائي فقد اشرك ومن صام يرائي فقد اشرك ومن تصدق يرائي فقد اشرك فقال
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறருக்குக் காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணை கற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்.
நூல். அஹ்மத் 17180
مسند أحمد بن حنبل (5/ 428)
23680 - حدثنا عبد الله حدثني أبي ثنا يونس ثنا ليث عن يزيد يعنى بن الهاد عن عمرو عن محمود بن لبيد ان رسول الله صلى الله عليه و سلم قال : ان أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا وما الشرك الأصغر يا رسول الله قال الرياء يقول الله عز و جل لهم يوم القيامة إذا جزى الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراؤون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء
“நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். “நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள் என அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)
நூல்: அஹ்மத் 23006

உன்னத இறைவனுக்கு உவமை கற்பிக்கும் இழிசெயலை வெறுத்த உம்மு ஸுலைம் (ரலி)
- ஜவாஹிரா, காயல்பட்டிணம்.
இன்று ஏகத்துவவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள், தங்கள் வாழ்க்கையில் சறுகக் கூடிய சந்தர்ப்பங்களில் ஒன்று, அவர்களுடைய திருமண விஷயத்தில் ஆகும்.
தங்களுக்கு ஆதாயம் கிடைக்கின்றதென்றால் கொள்கையைக் காற்றிலே பறக்க விட்டு விடுவார்கள். அதுவரையிலும் தவ்ஹீதைக் குறித்து வீராவேசமாகப் பேசித் தள்ளியவர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய விஷயத்தில் மார்க்கத்தைப் புறந்தள்ளி விட்டு மனோ இச்சைக்கு மயங்கி விடுவார்கள். தாங்கள் தேர்ந்தெடுக்கும் துணை, கொள்கை வாதியா, இல்லையா என்பதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. தமக்கு வாழ்க்கை கிடைத்தால் போதும் என்ற மனோநிலையே அவர்களிடம் குடிகொண்டிருக்கும்.
ஆனால், செம்மல் நபியவர்களால் 'சுவனத்துப் பெண்' எனச் சிலாகித்துச் சொல்லப்பட்ட உம்மு ஸுலைம் (ரளி) அவர்கள், எந்த அளவுக்கு கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதைப் பின்வரும் சம்பவம்  மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
(இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்தபோது) அபூதல்ஹா (ரலி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை (மிகவும் விரும்பி) பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஸுலைம் (ரளி) அவர்கள், அபூதல்ஹா அவர்களே! உங்களைப் போன்றவர்கள் (பெண் கேட்டால்) மறுக்கப்படாது. (அவ்வளவு சிறந்வர்கள் நீங்கள்) ஆனால் நீங்கள் ஓரிறைக் கொள்கையை மறுப்பவராக இருக்கிறீர்கள். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். உங்களைத் திருமணம் செய்வது எனக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதுவே எனது மஹராகும். இதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என்று கூறினார்கள். அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அதுவே அவர்களுடைய மஹராக ஆனது.
அறிவிப்பவர்: அனஸ் (ரளி) (நூல்: நஸாயி 3289)
இந்தச் சம்பவத்திலே நமக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. உம்மு ஸுலைம் அவர்கள் ஏற்கனவே மாலிக் இப்னுந் நள்ர் என்பவருக்கு மனைவியாக இருந்து வந்தார்கள். அவர் மரணித்த பிறகு விதவையாக, அதுவும் பல குழந்தைகளுக்குத் தாயாக இருந்த சூழ்நிலையில் தான் இந்தச் சம்பவம் நடைபெறுகின்றது.
அபூ தல்ஹா அவர்கள், மதீனாவாசிகளில் மிகுந்த செல்வமும், செல்வாக்கும் பெற்றவராகத் திகழ்ந்தார். அப்படியிருந்தும் கூட ஏற்கனவே ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட உம்மு ஸுலைமை விரும்பிப் பெண் கேட்க முன்வந்துள்ளார். இங்குதான் உம்மு ஸுலைம் (ரளி) அவர்களின் கொள்கை உறுதி, வியப்பின் விளிம்புக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.
'நாமோ பல குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஆதரவற்ற விதவையாக இருக்கின்றோம். இவரை விட்டு விட்டால் நமக்கு மறுவாழ்வு கிடைப்பது கஷ்டம். எனவே வலிய வந்த இந்த வரனைத் தட்டிக் கழிக்காமல் ஏற்றுக் கொள்வோம்: அவர் எந்தக் கொள்கையில் இருந்தால் தான் என்ன?' என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை. 'ஏகத்துவம்' என்னும் தூய கொள்கையை ஏற்றுக் கொண்ட நமக்கு, 'இணைவைப்பு' என்னும் அசுத்தமான செயலைச் செய்யக்கூடிய ஒருவர் எப்படி வாழ்க்கைத் துணையாக வரமுடியும் என்ற எண்ணம் மேலோங்கிடவே, தம்முடைய எண்ணத்தை அபூ தல்ஹாவிடம் மிகத் துணிச்சலாக வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றார்கள்.
அவர்களுடைய இத்தகைய துணிச்சலுக்குக் காரணம், இறைவனுடைய வார்த்தைகளுக்கு அவர்கள் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இவ்வுலக வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கையே மேலானது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இதோ இறைமறை இயம்புகின்றது:
இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்.
(அல்குர்ஆன் 2:221)
இந்த வசனம் ஏற்படுத்திய தாக்கம்தான், உம்மு ஸுலைம் (ரளி) அவர்கள், அபூ தல்ஹாவை ஏற்க மறுத்ததற்கு முக்கிய காரணம். ஆனால், ஸஹாபியப் பெண்மணிகளின் வரலாற்றை வானளாவப் புகழும் நம் சமுதாயப் பெண்மணிகள், திருமணம் என்று வந்துவிட்டால் தம்முடைய ஈமானையே அடகு வைத்து விடுகின்றனர். கன்னிப் பெண்களுக்கே வாழ்க்கைத் துணை அமைவது குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில் விதவைகளுக்கு மறுவாழ்வு கிடைப்பது என்பது மிகவும் அரிது என்பதால் 'யாராக இருந்தால் என்ன? அவர் எந்தக் கொள்கை உடையவராக இருந்தால் என்ன? நமக்கு வாழ்க்கை கிடைத்தால் போதும்' என்றே அவர்கள் தமக்குரிய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர்.
ஆண்களும் இதில் விதிவிலக்கல்ல. 'பெற்றோர் சொன்னார்கள்; உற்றார் சொன்னார்கள்; எனவே, அவர்கள் மனம் கோணும்படி நடக்கக் கூடாது' என சால்ஜாப்பு சொல்லி, கொள்கையைத் தூக்கி எறிந்து விடுகின்றனர்.
ஆனால், இவர்களெல்லாம் நம்மைப் படைத்த  நாயன் முன்னிலையில் தம்முடைய செயலுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 'தமக்கு ஏற்ற கொள்கைவாதிகள் தம்மை மணம் முடிக்க முன்வரமாட்டார்களா?' என்று தவ்ஹீதையே தம்முடைய உயிர் மூச்சாகக் கொண்டுள்ள பல கன்னியரும், விதவையரும் காத்துக் கொண்டிருக்க, இவர்கள் அந்தப் பெண்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு, கொள்கையற்ற வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றால்  வாழ்க்கைத் துணை அமையப் பெறாத அந்தப் பெண்களின் கண்ணீருக்கு இவர்கள் காரணமில்லையா? பாதிக்கப்பட்ட அவர்கள் இறைவனிடத்தில் இவர்களுக்கு எதிராகக் கையேந்தி விட்டால், இவர்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பத்தான் முடியுமா?
எனவே, வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய விஷயத்தில், ஏகத்துவ வாதிகள், உம்மு ஸுலைம் (ரளி) அவர்களின் வார்த்தைகளைத் தம் மனக்கண் முன்னால் நிறுத்திப் பார்க்க வேண்டும்.
'இணை வைக்கும் இழிசெயலுக்கு ஒருபோதும் துணை போக மாட்டோம்; இணை வைக்கும் பெரும் பாவத்தில் வீழ்ந்து கிடப்போரை எம் வாழ்க்கைத் துணையாக ஏற்கவே மாட்டோம்; இணை வைத்தலை நஞ்சாய் வெறுப்போம்; அணுவளவும் அதற்கு இடம் கொடோம்; அதன்  சாயல் கூட எம் மீது படிய விடோம்' என அனைவரும் சபதம் ஏற்போம்.

கேள்வி பதில்
?நான் லண்டனில் வசித்து வருகிறேன். இங்கு என்னால் முடிந்தவரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன் . ஆனால்  என்னைச்  சுற்றி  உள்ளவர்கள்  அவ்வாறு இல்லாமலும்  என்னைக்  குறை சொல்லிக்  கொண்டும்  இருக்கிறார்கள். மேலும்  அவர்களைவிட  எனக்கு  சோதனை  அதிகமாகவும்  நெருக்கடி அதிகமாகவும்  உள்ளன. சமயத்தில்  எனக்கு  அவர்களைப்  போல் இருந்து விடலாம்  போலும்  தோன்றுகிறது. இந்நிலையில்  நான்  என்ன செய்வது? தயவு  செய்து  நல்ல  விளக்கம்  தரவும். எனக்காக துவாசெய்யவும் .
இப்ராஹிம், மின்அஞ்சல் வழியாக
!பொதுவாக இந்த உலகம் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஒரு சிறைச்சாலையைப் போன்றதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம்,இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.
அறிவிப்பவர்  அபூ ஹூரைரா (ரலி)
நூல் முஸ்லிம் (5663)
சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிகவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்றுதான் இறைநம்பிக்கையாளர்களுக்கு இந்த உலகவாழ்க்கையும்.
மறுமையைப் பற்றிய அச்சம் இல்லாமல் இறைவனுக்கு மாறுசெய்பவர்கள் செல்வச் செழிப்புகளுடன் அலங்காரத்துடனும் சுற்றித் திரிவது இறைவழியில் செல்வதை விட்டும் நம்மை ஒரு திசை திருப்பி விடக்கூடாது.
இறைவனுக்கு மாறுசெய்பவர்கள் இவ்வுலகில் நன்றாக இருப்பதைப் போன்று தெரிந்தாலும், மறுமையில் அவர்களுக்கு எவ்வித பாக்கியமும் கிடைக்காமல் இருப்பதற்காகத்தான் இறைவன் அவர்களுக்கு வாரிவழங்குகிறான். இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் முஃமின்களுக்கு எச்சரிக்கை செய்கின்றான்.
(ஏக இறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதி. பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் அது கெட்டது. எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.
(அல்குர்ஆன் 3 : 196 - 198)
யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் அவர் அல்லாஹ்வை உண்மையில் நம்புகிறாரா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான்.
நாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும்போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை அல்லாஹ் சோதிக்கக் கூடும். இது போன்ற நேரங்களில் நாம் தடம் புரண்டு விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெறமுடியும்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.
அல்குர்ஆன் (2 : 155, 156, 157)
இவ்வுலகின் வறுமை போன்ற துன்பங்களைக் காட்டி ஷைத்தான் நம்மை தவறான பாதையில் அழைத்துச் செல்வற்கு முயற்சி செய்வான். நாம் ஒருபோதும் ஷைத்தானின் மாயவலையில் வீழ்ந்து விடக் கூடாது.
ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2 : 268
இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளுக்காக நாம் மறுமையை பாழாக்கிவிடக்கூடாது என்பதற்காக அல்லாஹ் முஃமின்களுக்கு மறுமையை முன்னிறுத்தி உபதேசம் செய்கின்றான்
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. ''இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.
அல்குர்ஆன் (2 : 14, 15)
பெரும்பாலும் இவ்வுலகில் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் மனிதர்கள் மார்க்கம் தடை செய்த காரியங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமைகிறது.
பணம் சம்பாதிக்கும் விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் மிகச் சிறந்த உபதேசத்தை நமக்குச் செய்துள்ளார்கள்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) இறைவன் உங்களுக்காக வெளிக் கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். பூமியின் வளங்கள் எவை? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை) என்று பதிலளித்தார்கள்.
அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா? என்று வினவினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் கேள்வி கேட்டவர் எங்கே? என்று வினவினார்கள். அம்மனிதர் (இதோ) நான் (இங்கிருக்கிறேன்) என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.
நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,)வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்துக் கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு ஜீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.
இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.
நூல் : புகாரி (6427)
அல்லாஹ்விற்கு அஞ்சி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற நன்னோக்கத்தில் வாழ்ந்தால் யாரும் நம்மை வழிகெடுத்துவிட முடியாது. உள்ளம் நேர்வழியின் மீது நிலைத்திருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.
அல்குர்ஆன் (3: 8)

?ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால், அந்தப் பெண்ணுடைய தாயார் பூப்பெய்த பெண்ணின் தகப்பனுக்குக்  கூட சொல்லக் கூடாது என்கிறார்கள். இது போல் ஏதாவது ஹதீஸ் உள்ளதா?
ஒரு பெண் வயதிற்கு வரும் போது மார்க்கம் என்று நினைக்காமல் கலாச்சாரம் என்ற அடிப்படையில் நெருங்கிய உறவினர்களை அழைக்கலாமா? இது பிற சமயத்திற்கு ஒப்பானதல்ல. ஹிந்து சமுதாயத்தினர் அந்தப் பெண்ணை ஒதுக்குப் புறமாக தங்க வைத்து விடுவார்கள். நாம் அவ்வாறு செய்வதில்லை. இது தொடர்பாக விளக்கம் தேவை.
ரிஃபா, மதுரை 
!ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் அந்தச் செய்தியை தேவை என்ற அடிப்படையில் யதார்த்தமான முறையில் பிறரிடம் தெரிவிப்பதற்கு மார்க்க அடிப்படையில் எந்தத் தடையும் இல்லை. வயதிற்கு வந்த பெண்ணுடைய தகப்பனாரிடம் கூட தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் கூறுவது மூடநம்பிக்கையாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னுடைய ஒன்பதாவது வயதில் பருவமடைந்தார்கள். அதன் பிறகு நபியவர்கள் அவர்களுடன் இல்லறத்தில் ஈடுபட்டார்கள் என்பது போன்ற தகவல்கள் புகாரி, முஸ்லிம் போன்ற பல ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.
ஒரு பெண் பருவமடைந்ததை தேவை என்ற அடிப்படையில் யதார்த்தமான முறையில்  மற்றவர்களுக்குத் தெரிவிப்பதில் தவறில்லை என்பதை இதிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
பெண்கள் வயதிற்கு வருதல் என்பது இன்று புதிதாக ஏற்பட்ட ஒன்றல்ல. அல்லாஹ் இவ்வுலகில் பெண்களைப் படைத்த காலம் முதல் பெண்கள்  வயதிற்கு வருதல் என்பது இயற்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நான்கு பெண்மக்களை வழங்கியிருந்தான். நான்கு பெண்மக்களுமே பருவ வயதை அடைந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்மக்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.
பெண்கள் பருவ வயதை அடையும் போது, அதற்கு விழா எடுக்க வேண்டும் என்பதோ அல்லது உறவினர்களை அழைக்க வேண்டும் என்பதோ அவசியமாக இருந்திருந்தால் நபியவர்கள் அதற்கு முன்மாதிரியாக இருந்திருப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, அல்லது அருமை ஸஹாபாக்களோ பெண்கள் பூப்பெய்தலுக்காக எந்த ஒரு சடங்கும் செய்ததில்லை.
பெண்கள் பூப்பெய்தால் உறவினர்களை அழைக்க வேண்டும் என்பது கலாச்சாரம் கிடையாது. ஒரு வாதத்திற்கு கலாச்சாரம் என்று வைத்துக் கொண்டாலும் முட்டாள் தனமான ஒரு காரியத்தை கலாச்சாரம் என்ற போர்வையில் செய்வது கூடாது. நாம் மலம் ஜலம் கழிப்பது எப்படி ஒரு இயற்கையான நிகழ்வோ அது போன்றுதான் ஒரு பெண் வயதிற்கு வருதல் என்பது இயற்கையான ஒரு நிகழ்வாகும். இது போன்ற நிகழ்வுகள் வயதிற்கு வந்த பெண்ணிற்கு மாதா மாதம் ஏற்படக்கூடிய ஒன்றாகும். இதனை உறவினர்களை அழைத்து தெரிவிக்க வேண்டும் என்பது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கமுடியும்? மூடத்தனமான காரியங்களை கலாச்சாரம் என்ற பெயரில் செய்வதற்கு மார்க்கம் ஒரு போதும் அனுமதிக்காது.
பெண்கள் பருவவயதை அடைந்தால், அவர்களுக்குச் சடங்கு செய்தல் என்பதும், பூப்புனித நீராட்டு விழா நடத்த வேண்டும் என்பதும் மாற்று சமுதாய மக்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட முட்டாள்தனமான கலாச்சாரம் ஆகும்.
“யார் மாற்றுமதக் கலாச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே“ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : பஸ்ஸார்.
எனவே இது போன்ற பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள்தனமான காரியங்களை கலாச்சாரம் என்ற பெயரில் கூட ஒரு முஃமின் செய்வது கூடாது.
?மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்?
பைசுல் ரஹ்மான், மதுரை
!மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு  செல்லாதவரை நாம் நேசித்துக் கொள்ளலாம்.
நாம் யாரை நேசித்தாலும் பகைத்தாலும் அல்லாஹ்விற்காக எந்த அடிப்படையிலே அமைந்திருக்க வேண்டும். இறை நேசத்தை விட வேறு எதுவும் நம்மிடம் மோலோங்கி விடக்கூடாது.
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)
1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.             
2.ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3.நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறை மறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.
அறிவிப்பவர் :  அனஸ் (ரலி) 
நூல் : புகாரி (16)
நாம் அல்லாஹ்வைப் போன்று யாரையும் நேசிப்பது கூடாது.
அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது  போல்  அவர்களை  விரும்புவோரும்  மனிதர்களில்  உள்ளனர். நம்பிக்கை  கொண்டோர்  (அவர்களை விட)  அல்லாஹ்வை  அதிகமாக நேசிப்பவர்கள்.  அநீதி இழைத்தோர்  வேதனையைக்  காணும்போது அனைத்து  வல்லமையும்  அல்லாஹ்வுக்கே  என்பதையும்,  அல்லாஹ் கடுமையாகத்  தண்டிப்பவன்  என்பதையும்  கண்டு  கொள்வார்கள்.
(அல்குர்ஆன் 2:165)
அல்லாஹ்வை நேசிக்க வேண்டுமென்று மட்டும் சொல்லாமல்,அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கலாகாது என்றும், அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். மற்ற எவரையும், எதனையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்களே மூமின்கள் என்றும் இங்கே விளக்கம் தருகிறான்.
யார் அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கின்றாரோ அவர் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கியவராவார். இய்யாக நஃபுது' (இறைவா உன்னையே வணங்குகிறோம்) எனும் உறுதிமொழியை மீறியவராவார். இறைவனளவுக்கு மற்றவர்களை நேசிப்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த காஃபிர்களுடைய (இஸ்லாத்தை ஏற்காதவர்களுடைய) கொள்கையாக இருந்திருக்கின்றது என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.
அல்லாஹ் மட்டும் கூறப்படும்போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
(அல்குர்அன் 39:45)
இறைவனின் பெயரைக் கூறும்போது ஏற்படாத மகிழ்ச்சி இறைவனல்லாத மற்றவர்களைக் கூறும்போது ஒருவனுக்கு ஏற்படுமானால் இறைவனின் அழைப்பை, பாங்கைக் கேட்கும் போது ஏற்படாத பக்தி சமாதிகளைக் காணும்போது ஒருவனுக்கு ஏற்படுமானால், அவனது உள்ளத்தில் இறைவனின் நேசத்தை விட மற்றவர்களின் நேசமே அதிகமாகக் குடி கொண்டுள்ளது என்று பொருள். இய்யாக நஃபுது' என்பதை அவன் பூரணமாக ஏற்கவில்லை.
இறைவனது கட்டளை இதுதான் என்று கூறப்படும்போது எனது தந்தை,எனது தாய், எனது மனைவி இப்படிக் கூறுகிறார்களே என்று ஒருவன் கூறத் துணிந்து விட்டால், அவனது உள்ளத்திலும் இறை நேசத்தை விட அவனது குடும்பத்தினர் மீது அதிக நேசம் இருக்கிறது என்று பொருள்! இய்யாக நஃபுது' என்பதற்கும் இவனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.
பின்வரும் வசனங்களில் நாம் இறைவனை விட வேறு யாரையும் நேசிக்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும்,உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும்,நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரைவிட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும்வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 9 : 24)
அல்லாஹ்வை நேசித்தல் என்பது இறைச் செய்திகளைப் பெற்றுத் தந்த நபிகள் நாயகத்தை நேசிப்பதையும் உள்ளடக்கியதாகும்.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான்.  உங்கள்  பாவங்களை  மன்னிப்பான். அல்லாஹ்  மன்னிப்பவன்;  நிகரற்ற  அன்புடையோன்''  என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும்,  இத்தூதருக்கும்  கட்டுப்படுங்கள்!  நீங்கள் புறக்கணித்தால்  (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்''எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 3 : 31, 32)
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களைவிட இந்த நபி  (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.
(அல்குர்ஆன் 33 : 6)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (15)
அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும்வரை (நீர் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்) என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (6632)

?ஜும்மா தொழுகையில் கலந்துகொள்ள முடியாமல் போனால் 2 ரக்அத் தொழ வேண்டுமா? அல்லது நான்கு ரக்அத்  லுஹர்  தொழவேண்டுமா?
அனீஸ்,இராம்நாட்
!ஜூம்ஆ உட்பட எந்தத் தொழுகையாக இருந்தாலும் இரண்டு பேர் இருந்தால்  ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்
அறிவிப்பவர் அபூ ஸயீத் (ரலி)
நூல்கள்  திர்மிதி (204) அபூதாவூத் 487
மேற்கண்ட ஹதீஸில் இரண்டு நபர்கள் சேர்ந்து தொழுவதை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். இது ஜூம்ஆ தொழுகை உட்பட நாம் ஜமாஅத்தாகத் தொழக்கூடிய அனைத்து தொழுகைகளுக்கும் உரிய சட்டம்தான்.
எனவே ஜூம்ஆ தொழுகை தாமதமாகிவிட்டால் இரண்டு நபர்கள் இருந்தால் அவர்களில் ஒருவர் உரை நிகழ்த்தி இருவரும் ஜமாஅத்தாக இரண்டு ரக்அத் ஜூம்ஆ தொழுது கொள்ளலாம்.
தொழுவதற்கு யாருமே இல்லையென்றால் லுஹராக நான்கு ரக்அத்துகள் தொழுது கொள்ள வேண்டும்.                                  
?வீடு  வாங்குவது  வரதட்சனையாகுமா?   ஏனெனில்  நபி (ஸல்) அவர்கள் பதினோரு திருமணம் செய்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு மனைவியருக்கும்  வீடு கட்டி  கொடுத்து  இருக்கிறார்களா?  அல்லது ஏதாவது  ஒரு மனைவிக்கு வீடு கொடுத்து இருக்கிறார்களா? விளக்கம்தேவை.
முஹம்மது இஹ்சாஸ்,  இலங்கை
!உங்கள் கேள்வி மிகவும் வியப்பாக இருக்கிறது. கணவன் தன்னுடைய மனைவியுடன் வாழ்வதற்காக தன்னுடைய உழைப்பில் வீடு கட்டிக் கொள்வதோ அல்லது மனைவிக்கு வழங்குவதோ மார்க்க அடிப்படையில் தவறானது கிடையாது.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக அப்பெண் வீட்டாரிடம் ஒரு வீட்டையே வரதட்சணையாகப் பெறும் கொடுமை சில முஸ்லிம் ஊர்களில் நிலவி வருகிறது. இது மாபெரும சமூகக் கொடுமை ஆகும். இதைத்தான் நாம் வரதட்சணைக் கொடுமை என்று கூறிவருகிறோம்.
நபியவர்கள் மரணிப்பதற்கு முன்னால் உயிருடன் இருந்த அனைத்து மனைவிமார்களும் தனித்தனி வீடுகளில் வசித்ததாக நாம் ஹதீஸ்களில் காண்கிறோம். இது நபியவர்கள் தம்முடைய மனைவிமார்களுக்கு செய்து கொடுத்த வசதிதானே தவிர, நபியவர்கள் தம்முடைய மனைவியின் குடும்பத்தாரிடமிருந்து பெற்றவை அல்ல.
நபியவர்களின் மனைவிமார்கள் வசித்தது அனைத்துமே நபியவர்களின் வீடுதான் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الْأُوَيْسِيُّ حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلَالِ ثُمَّ الْهِلَالِ ثَلَاثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ فَقُلْتُ يَا خَالَةُ مَا كَانَ يُعِيشُكُمْ قَالَتْ الْأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنْ الْأَنْصَارِ كَانَتْ لَهُمْ مَنَائِحُ وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ فَيَسْقِينَا
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீடுகளில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர் தவிர, அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (2567, 6459)