Sunday, June 27, 2010

இஸ்லாத்தில் பொதுவாக தடுக்கப்பட்டவை

அநியாயமாக ஓர் உயிரைக் கொல்வது.

சிசுக்களைக் கொல்வது.

தற்கொலை செய்வது.

விபசாரம் செய்வது.

ஓரின சேர்க்கை புரிவது.

சுய இன்பம் அடைவது.

மது அருந்துவது, அதை தயார் செய்வது, அதை விற்பது, எடுத்துச் செல்வது.

திருடுவது.

பெற்றோருக்கு மாறு செய்வது, அவர்களை அதட்டுவது, மிரட்டுவது, சீ என்று அவர்களை சொல்வது.

போரில் புறமுதுகுக் காட்டி ஓடுவது.

முஃமின்களுக்கு நோவினை செய்வது, அவர்கள் செய்யாத குற்றத்தை அவர்கள் மீது சுமத்துவது, அவர்களைக் குறை கூறுவது.

அல்லாஹ்வுக்கு அதிருப்தியளித்து மக்களை மகிழ்விப்பது.

ஒப்பந்தங்களை உறுதி செய்தபின் அவைகளை முறிப்பது.

பெற்றோரை மாற்றிக் கூறுவது.

நெருப்பால் தண்டிப்பது, உயிர் உள்ள வைகளை, இறந்தவைகளை நெருப்பிட்டுக் கொளுத்துவது.

இறந்தவர்களின் உடல் உறுப்புகளை வெட்டுவது, சிதைப்பது.

பாவமான, தவறான, அநியாயமான காரியங்களில் பிறருக்கு உதவுவது.

முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது.

முஸ்லிம்களுக்கு கெடுதல் விளைவிப்பது, அதற்கு சூழ்ச்சி செய்வது.

மார்க்கக் கல்வி ஞானமின்றி தீர்ப்பளிப்பது.

அல்லாஹ்வுக்கு பிடிக்காதவற்றில் பிறருக்கு கீழ்படிவது. (அவர் யாராக இருப்பினும் சரியே!)

பொய் சத்தியம் செய்வது.

வீணாக சத்தியம் செய்வது.

ஒழுக்கமான பெண்களை பழி சுமத்தியவர்கள் தவ்பா செய்து திருந்தவில்லையெனில் அவர்களது சாட்சியை ஏற்றுக் கொள்வது.

அல்லாஹ் அனுமதித்தவைகளை ஹராம் என்று விலக்கிக் கொள்வது.

ஷைத்தானின் வழிகளை பின்பற்றுவது.

அனுமதியின்றி பிறர் பேசிக் கொண்டிருப்பதை கேட்பது.

அனுமதியின்றி பிறர் வீட்டில் நுழைவது.

தனக்கு சொந்தமல்லாததை தனக்கு சொந்தமானது என்று கூறுவது

தான் அனுபவிக்காததை அனுபவித்த தாகக் கூறுவது, தன்னிடம் இல்லாததை இருப்பதாகக் கூறுவது.

செய்யாத ஒன்றைக் கூறி புகழ் தேடுவது.

இறை கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானவர்களின் ஊர்களுக்குள் செல்வது. (ஆனால் படிப்பினை பெரும் நோக்கத்துடன் அல்லது அழுதவர்களாக அவ்வூர்களுக்குச் செல்வது கூடும்.)

பாவமான விஷயத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது.

பிறர் குறைகளை ஆராய்வது.

நல்ல ஆண், பெண்கள் மீது கெட்ட எண்ணம் கொள்வது.

பொறாமை கொள்வது.

குரோதம் கொள்வது.

உறவுகளை, சமுதாயத்தை புறக்கணித்து வாழ்வது.

அசத்திய வழியில் செல்வது.

பெருமை, பகட்டு, தற்பெருமை, அகந்தை, அகம்பாவம், மமதை கொள்வது.

உலக வஸ்துக்களைக் கொண்டு மகிழ்ச்சி அடைவது.

பூமியில் பெருமையாக நடந்து செல்வது.

மக்களை விட்டும் முகத்தை திருப்பிக் கொள்வது. (அதாவது மக்களிடம் பழகுவதை தவிர்ப்பது பெருமையின் அடையாளமாகும்.)

கொடுத்த தர்மத்தை திரும்பப் பெருவது. (தர்மம் கொடுத்த பொருளை விலைக்குக் கூட திரும்ப வாங்கக் கூடாது.)

தந்தை தனது மகனைக் கொலை செய்துவிட்டால் அவரைக் கொல்வது.

பிறரின் மர்மஸ்தானத்தைப் பார்ப்பது. (இந்த சட்டத்தில் ஆண், பெண் இருபாலாரும் சமமானவர்களே.)

பிறரின் தொடையை பார்ப்பது. (அவர் இறந்தவராயினும் சரியே!)

சங்கைமிகு (ரஜப், துல் கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) மாதங்களின் கண்ணியத்தை பாழ்படுத்துவது.

கெட்ட வழியில் சம்பாதித்து நல்ல வழியில் செலவு செய்வது.

தொழிலாளியிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பது.

பிள்ளைகளுக்கு சமத்துவமின்றி அன்பளிப்பு வழங்குவது.

வஸிய்யத் செய்வதில் தவறிழைப்பது.

வாரிசுக்கு வஸீய்யத் செய்வது.

முழு சொத்தை வஸீய்யத் செய்வது. (அப்படி வஸிய்யத் செய்தாலும் மூன்றில் ஒன்றுதான் செல்லுபடியாகும்.)

அண்டை வீட்டாருடன் தவறாக நடந்து கொள்வது.

அண்டை வீட்டாருக்கு நோவினை செய்வது, தொந்தரவு தருவது.

மார்க்கக் காரணமின்றி மூன்று நாள்களுக்கு மேல் ஒரு முஸ்லிமுடன் பேசாமல் இருப்பது.

கற்களை சுண்டி எறிந்து விளையாடுவது. (இதன் மூலம் பிறருக்கு தீங்கு ஏற்படலாம். மேலும் கண், பற்களில் பட்டு காயம் ஏற்படலாம்.)

பிறர் மீது அத்துமீறுவது. (ஏசுவது, சண்டையிடுவது, உரிமையைப் பறிப்பது.)

போட்டிக்காக ஒருவர் மற்றவரைவிட சப்தமிட்டுக் குர்ஆன் ஓதுவது.

இருவர் பேசிக் கொண்டிருக்கும்போது அனுமதியின்றி குறுக்கிடுவது. அனுமதியின்றி அவர்களைப் பிரிந்து செல்வது.

ஒருவர் அமர்ந்திருக்கும்போது அவரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் அமர்வது.

ஒருவருடன் இருக்கும்போது அவர் அனுமதியின்றி எழுந்துச் செல்வது.

அமர்ந்திருப்பவருடைய தலைக்குப் பின்னால் நிற்பது.

பாதி வெயிலிலும் பாதி நிழலிலும் உட்காருவது. (ஏனெனில் இது ஷைத்தானின் முறையாகும்.)

மக்களுக்கு துன்பம் விளைவிப்பது.

மக்கள் மீது வாளை ஒங்குவது.

இரும்புப் பொருள்களைக் கொண்டு ஒருவரை சுட்டிக் காட்டுவது.

வாள், கத்தி போன்றவைகளை உறுவிய நிலையில் எடுத்துச் செல்வது.

மார்க்கத்தில் தடையில்லாமல் இருக்கும் போது அன்பளிப்பைத் தவிர்ப்பது.

தேவையான இடங்களில் தேவைக்கு அதிகமாக செலவு செய்வது.

தேவையில்லாத இடங்களில் செலவு செய்வது.

விருந்தாளிக்காக சிரமமெடுத்து பகட்டாக விருந்து செய்வது.

புத்தி சுவாதீனமானவர்களிடம் அவர்களது பொருளை ஒப்படைப்பது.

ஆண், பெண்களில் அல்லாஹ் சிலருக்கு கொடுத்திருக்கும் சிறப்பைப் பார்த்து மற்றவர்கள் ஆசைப்படுவது.

தர்கித்துக் கொள்வது, சண்டையிட்டுக் கொள்வது, வீண் விவாதங்கள் செய்வது.

விபசாரிகளை தண்டிக்கும்போது கருணை காட்டுவது.

தர்மம் செய்தபின் அதை சொல்லிக் காண்பிப்பது.

தர்மம் வாங்கியவரை துன்புறுத்துவது.

தெரிந்த சாட்சியத்தை மறைப்பது.

அநாதைகளை அடக்குவது.

யாசிப்பவர்களை விரட்டுவது.

அசுத்தமானது, ஹராமானது ஆகியவைகளை மருந்துக்கு உபயோகிப்பது. (அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு அசுத்தமான, ஹராமான பொருளில் நோய் நிவாரணத்தை வைக்க வில்லை)

போரில் பெண்களை, குழந்தைகளை கொல்வது.

தேவையற்ற சிரமம் எடுப்பது.

ஒரு மார்க்க அறிஞரிடம் அவரை குழப்பத்திலும் சந்தேகத்திலும் ஆழ்த்தும் விஷயங்களை கேட்பது. அல்லது தனது நுண்ணறிவையும் திறமையையும் வெளிப் படுத்துவதற்காக நடக்காத கற்பனையான விஷயங்களைப் பற்றி கேட்பது.

எவ்வித பயனுமற்ற வீண் விவாதங்களில் ஈடுபடுவது.

செஸ், தாயம் மற்றும் இதுபோன்ற விளையாட்டுகள் பணத்திற்காக விளையாடுவது.

கால்நடைகளை சபிப்பது.

சோதனை காலத்தில் முகத்தில் அறைந்து கொள்வது, கீறிக் கொள்வது.

குடிமக்களுக்கு மோசடி செய்வது.

உலக விஷயத்தில் தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ளவரைப் பார்க்காமல் உயர்ந்த நிலையில் உள்ளவரைப் பார்ப்பது. (இது அல்லாஹ் தனக்கு கொடுத்த அருளை உயர்வாகக் கருதாமல் தாழ்வாக கருதுவதற்கு வழி வகுக்கும்.)

பெருமை பேசுவது.

வாக்குக்கு மாறு செய்வது.

அமானிதத்திற்கு மோசடி செய்வது.

கற்ற கல்வியை மறைப்பது.

தவறான விஷயத்தில் பரிந்துரை செய்வது.

தேவையின்றி பிறரிடம் யாசகம் கேட்பது.

பிரயாணத்தின் போது மணி ஓசை எழுப்புவது. (அதாவது வாகனத்தில் மணி கட்டுவது.)

நாய்களை வீட்டினுள் வளர்ப்பது. (கால்நடைகள், விவசாயம், தோட்டங்கள் முதலியவற்றின் பாதுகாப்பிற்காக அல்லது வேட்டைக்காக வளர்க்கலாம்.)

ஒழுக்கம் கற்பிக்க கண்டிக்கும்போது அதிகபட்சம் பத்து அடிக்குமேல் அடிப்பது.

அதிகமாக சிரிப்பது.

நோயாளிகளை உண்பதற்கும், பருகு வதற்கும் நிர்பந்திப்பது. (ஏனெனில் அல்லாஹ் அவர்களுக்கு உணவளிக்கிறான், நீர் புகட்டுகிறான்.)

குஷ்டரோகிகளை உற்றுப் பார்ப்பது.

ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமை பயமுறுத்துவது.

தான் கொடுத்த அன்பளிப்புகளையோ, வெகுமதிகளையோ திரும்பப் பெறுவது. (ஆனால் தந்தை பிள்ளைக்குக் கொடுத்த வைகளை திரும்பப் பெறலாம்.)

இடது கையால் கொடுப்பது, வாங்குவது.

நிபந்தனையிட்டு நேர்ச்சை செய்வது. (இதனால் அல்லாஹ்வின் விதியை மாற்ற முடியாது. இவ்வாறு கஞ்சன்தான் செய்வான்.)

வைத்திய ஞானமின்றி வைத்தியம் பார்ப்பது.

எறும்பு, தேனீ, மரங்கொத்தி பறவை ({ஹத் {ஹத்) இவைகளைக் கொல்வது.

தனது சுவரில் பலகை ஒன்றை நட்டுக் கொள்ள அண்டை வீட்டாரைத் தடுப்பது.

கையால் சைகை செய்து ஸலாம் சொல்வது.

தெரிந்தவர்களுக்கு மட்டும் ஸலாம் சொல்வது. (தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் ஸலாம் சொல்ல வேண்டும்.)

ஸலாம் சொல்லாமல் பேசியவருக்கு பதில் சொல்வது.

ஒரு ஆண் மற்றொரு ஆணை, ஒரு பெண் மற்றொரு பெண்ணை இச்சையுடன் முத்தமிடுவது.

கோபமாக இருக்கும்போது தீர்ப்பளிப்பது.

அடுத்தவரின் வாதத்தை கேட்காமல் ஒருவரின் வாதத்தை மட்டும் கேட்டுவிட்டு தீர்ப்பளிப்பது.

சூரியன் மறையும் (மஃரிப்) நேரத்தில் பிள்ளைகளை வீட்டிலிருந்து வெளியில் அழைத்துச் செல்வது. (முழுமையாக இருட்டிய பின் வேண்டுமானால் அழைத்துச் செல்லலாம். ஏனெனில், அது ஷைத்தான்கள் பரவும் நேரமாகும்.).

இரவில் பழங்களை மரத்திலிருந்து பறிப்பது.

இரவில் அறுவடை செய்வது. (இவ்வாறு செய்வதால் ஏழை, எளியோருக்கு அது தெரியாமல் ஆகிவிடலாம். அறுவடை அன்றே அதில் கடமையான தர்மத்தை கொடுத்துவிட வேண்டுமென்று அல்லாஹ் கூறியிருப்பதால் ஏழைகளை தவிர்ப்பதற்காக இவ்வாறு சூழ்ச்சி செய்வது கூடாது.)

கடைத் தெருவில் நடந்து செல்லும்போது மற்றவர்களுக்கு இடையூறு தரும்படியான, காயப்படுத்தும்படியான பொருள்களை எடுத்துச் செல்வது.

காலரா பரவியிருக்கும் ஊரிலிருந்து வெளியேறுவது, அந்த ஊருக்குச் செல்வது.

வெள்ளி, சனி, ஞாயிறு, புதன் ஆகிய கிழமைகளில் இரத்தம் குத்தி எடுப்பது. (வியாழன், திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் எடுக்கலாம்.)

தும்மியதற்குப்பின் அல்லாஹ்வை புகழாதவருக்கு (அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லாதவருக்கு) யர்ஹமுக்கல்லாஹ் சொல்வது.

கஅபாவின் திசையில் எச்சில் துப்புவது.

இரவில் பயணம் செய்யும்போது பாதையின் ஓரங்களில் ஓய்வெடுப்பது.

காற்று பிரியும் சத்தத்தைக் கேட்டு சிரிப்பது (இது எல்லோருக்கும் ஏற்படும் இயற்கையாகும். அவ்வாறு சிரிப்பதால் பிறருக்கு சங்கடம் ஏற்படலாம்.)

நறுமணம், தலையணை, துளசி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது.